கனமழையால் நிலச்சரிவு- 14 பேர் பலி

காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சேர்ப்பு
கனமழையால் நிலச்சரிவு- 14 பேர் பலி
x
கொலம்பியாவின் கவுகா மாகாணத்தில் உள்ள ரோசாஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் உயிரிழந்தனர். இப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.இதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவால், 8 வீடுகள் மண்ணுக்குள் மூழ்கியது. இதில் சிக்கியவர்களில் 14 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்