இலங்கை குண்டுவெடிப்பு : தாக்குதல் நடத்தியவர் குறித்த புதிய தகவல்

தொடர் குண்டுவெடிப்புகளை தொடர்ந்து, இலங்கையில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை குண்டுவெடிப்பு : தாக்குதல் நடத்தியவர் குறித்த புதிய தகவல்
x
தொடர் குண்டுவெடிப்புகளை தொடர்ந்து, இலங்கையில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் வாகனசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவர், ஓட்டமாவடியை சேர்ந்த உமர் என தகவல் வெளியாகியுள்ளது. குண்டு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மூலம் இந்த தாக்குதலை அவர் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தேவாலயம் அருகே நேற்று காலை கையில் பையுடன் சுற்றிதிரிந்த உமர் உள்ளே செல்லாமல் தொடர்ந்து நோட்டமிட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தேவாலயம் அருகேயிருந்த கடையிலிருந்து அந்த நபர் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்