இந்திய தூதரகத்திடம் தெரிவிக்காமல் 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி

கொலை மற்றும் திருட்டு வழக்கில் கைதான 2 இந்தியர்களுக்கு, தூதரகத்திடம் அறிவிக்காமலேயே சவுதி அரேபிய அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
இந்திய தூதரகத்திடம் தெரிவிக்காமல் 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி
x
கொலை மற்றும் திருட்டு வழக்கில் கைதான 2 இந்தியர்களுக்கு,  தூதரகத்திடம் அறிவிக்காமலேயே சவுதி அரேபிய அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்ஜித் மற்றும் சத்விண்டர், சக இந்தியரான ஆரிப்பை கொலை செய்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தை பிரிக்கும் போது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்தது விசாரணையில் உறுதியானது. கைது செய்யப்பட்ட இந்தியர்களை விடுவிக்கக் கோரி உறவினர்கள் பல முறை கருணை மனுக்களை அளித்துள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்ரவிரி 28ஆம் தேதி அன்று, 2 இந்தியர்களுக்கும் சவுதி அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.  மரண தண்டனை நிறைவேற்றியது குறித்து சவுதி அரசு இந்திய தூதரக அதிகாரிகளிடம் எவ்வித தகவலையும் தெரிவிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்