விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வரும் முயற்சி - மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு

இந்தியாவுக்கு நாடு கடத்த தடை விதிக்க கோரும் விஜய் மல்லையாவின் வேண்டுகோளை பிரிட்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வரும் முயற்சி -  மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு
x
 ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடன் ஏய்ப்பு செய்துவிட்டு, இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்துமாறு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.இந்த கோரிக்கையை ஏற்ற பிரிட்டன் நீதிமன்றம்,விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்டிருந்தது.இதற்கு எதிராக விஜய் மல்லையா மேல்முறையிட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,நாடு கடத்த தடை விதிக்க கோரிய மல்லையாவின் மனு நிராகரிக்கப்பட்டது.இதனால் தற்போது அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சி தீவிரமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்