விடுதலைப்புலிகளின் வெடிபொருட்களை தேடும் பணி : நீதிமன்ற அனுமதியுடன் முல்லைத் தீவில் ஆய்வு செய்த அதிகாரிகள்

இலங்கை, முல்லைத்தீவில் விடுதலைப்புலிகள் புதைத்து வைத்த வெடிப்பொருட்களை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் வெடிபொருட்களை தேடும் பணி : நீதிமன்ற அனுமதியுடன் முல்லைத் தீவில் ஆய்வு செய்த அதிகாரிகள்
x
இலங்கை, முல்லைத்தீவில் விடுதலைப்புலிகள் புதைத்து வைத்த வெடிப்பொருட்களை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட முத்தையன் காட்டுப்பகுதியில், கூட்டுறவு சங்க இடத்தில் வெடிப்பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியுடன் அந்த இடத்தில் குழி தோண்டி தேடும் பணிகள் நடைபெற்று வந்தன.  ஆனால் அந்த இடத்தில் எந்த  பொருட்களும் கிடைக்காத நிலையில் தோண்டும் நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்