நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு - 49 பேர் பலி

சுட்டுக் கொல்வதை படம் பிடிக்க துப்பாக்கியில் கேமரா
நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு - 49 பேர் பலி
x
நியூசிலாந்து நாட்டில், 2 மசூதிகளில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  படுகாயமடைந்த 20 பேர் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மசூதிக்குள் நுழைந்த தீவிரவாதி ஒருவன், அங்கு கண்ணில் படுவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளும்,  மனதை பதை பதைக்க வைக்கும்  வீடியோ வெளியாகியுள்ளது.    பலரை சுட்டுத் தள்ள வேண்டும் என்கிற நோக்கத்துடன் திட்டமிட்ட தீவிரவாதி, துப்பாக்கி முனையில் கேமராவை இணைந்து, தான் சுடுவதை வீடியோ எடுத்துள்ளான் என்கிற அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நாள்  நியூசிலாந்து வரலாற்றில் கறுப்பு நாள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்