தீவிரவாதத்திற்கு எதிராக எப்போதும் இலங்கை துணை நிற்கும் - இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம்

தீவிரவாதத்திற்கு எதிராக எப்போதும் இலங்கை துணை நிற்கும் என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிராக எப்போதும் இலங்கை துணை நிற்கும் - இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம்
x
தீவிரவாதத்திற்கு எதிராக எப்போதும் இலங்கை துணை நிற்கும் என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், புல்வாமா தாக்குதலால் பாதிக்கப்பட்ட இந்தியாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பதாக  தெரிவித்துள்ள இலங்கை, தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய பாகிஸ்தானுக்கு இடையே உள்ள பிரச்சனைக்கு , பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வழிவகுக்கும் அனைத்து முயற்சிகளுக்கு  ஆதரவு அளிப்பதாக இலங்கை கூறியுள்ளது. தெற்காசிய பகுதியில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை நிலை நாட்டும் வகையில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் இலங்கை கேட்டுக் கொண்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்