பயங்கரவாத தடுப்பு ஒத்திகையில் பாக். ராணுவத்தினர்
கடல் வழியாக ஊடுருவும் தீவிரவாதிகள் தடுக்கும் பயிற்சியில், பாகிஸ்தானின் கடற்படை ராணுவத்தினர் ஈடுபட்டனர்.
கடல் வழியாக ஊடுருவும் தீவிரவாதிகள் தடுக்கும் பயிற்சியில், பாகிஸ்தானின் கடற்படை ராணுவத்தினர் ஈடுபட்டனர். கராச்சியில் நடைபெற்ற பயங்கரவாத தடுப்பு ஒத்திகையில், ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. இதில் கடல் வழியாக நடைபெறும் போதை மற்றும் பல்வேறு கடத்தல் சம்பவங்களை தடுப்பது குறித்தும் ஒத்திகை நடத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் 'அமன்- 19' என்ற கடற்படை பயிற்சி, தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.
Next Story