பெரு : சுரங்கத்தில் சிக்கிய 4 பேர் உயிருடன் மீட்பு

பெரு நாட்டில் சுரங்கத்தில் சிக்கிய நான்கு பேர், மூன்று நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பெரு : சுரங்கத்தில் சிக்கிய 4 பேர் உயிருடன் மீட்பு
x
பெரு நாட்டில் சுரங்கத்தில் சிக்கிய நான்கு பேர், மூன்று நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். ஒயான் நகரில் திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, பம்பாகுவாய் சுரங்கம், மூடப்பட்டது. சுரங்கத்தில் சிக்கிய நான்கு ஊழியர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நான்கு பேரும் பத்திரமாக வெளியே அழைத்துவரப்பட்டனர். பெருவின் ஆண்டிஸ் மலையில் தற்போது மழைக்காலம் என்பதால், அவ்வப்போது நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்