ஒரே மேடையில் சிறிசேனா - ராஜபக்சே பேச்சு

சதி வேலைகளில் ரனில் ஈடுபட்டதாக சிறிசேனா குற்றச்சாட்டு
ஒரே மேடையில் சிறிசேனா - ராஜபக்சே பேச்சு
x
பேரணியை தொடர்ந்து சிறிசேன மற்றும் ராஜபக்சே தலைமையில் 'மக்கள் மகிமை' என்ற கூட்டம் நடைபெற்றது. ஒரே மேடையில் இருவரும் தோன்றி, அரசுக்கு ஆதரவு திரட்டினர். சிறிசேனா பேசுகையில், இந்தியா - இலங்கை உறவை பிரிக்கும் வகையில், அமைச்சரவை நடவடிக்கைகளை, ரனில் விக்கிரமசிங்க திரித்து கூறி சதி வேலைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். கடந்த மூன்றரை ஆண்டுகளாக ரனிலே, அனைத்து தீர்மானங்களையும் மேற்கொண்டதாகவும் தமிழர்  பிரச்சனை புதிய அரசு தீர்வு காணும் என்றும் சிறிசேனா உறுதியளித்தார்.

பின்னர் மழையிலும் காத்திருந்த மக்களிடம் சிங்களம் மற்றும் தமிழில் பேசிய ராஜபக்சே, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் இலங்கையை  கட்டியெழுப்ப உதவுமாறு கேட்டுக் கொண்டார். அனைவரையும் தான் நம்புவதாகவும், எல்லோரும் தன்னை நம்ப வேண்டும் என்றும் ராஜபக்சே கேட்டு கொண்டார். இலங்கையின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலன்களுக்காகவும் சிறிசேனாவுடன் இணைந்து பயணிக்க உள்ளதாகவும் ராஜபக்சே கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்