இந்தோனேசியா நிலநடுக்கம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 832 ஆக உயர்வு

சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியா நிலநடுக்கம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 832 ஆக உயர்வு
x
இந்தோனேஷியாவின் கலேவேசியா தீவில் கடந்த இருநாட்களுக்கு முன்பு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இதனால் சுனாமி தாக்கியது. இதில் பலு பகுதியில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் 

சுனாமியால் 6 அடி உயரத்துக்கு சீறி எழுந்த கடல் அலைகளில் மூழ்கியும்,  கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் 832 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என இந்தோனேசிய பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதியில் காணாமல் போன பலரை தேடும் நடவடிக்கையும், மீட்பு பணிகளும் முழுவீச்சில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்