தான்சானியா படகு விபத்து : பலி எண்ணிக்கை 136 ஆக உயர்வு

தான்சானியா படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது.
தான்சானியா படகு விபத்து : பலி எண்ணிக்கை 136 ஆக உயர்வு
x
தான்சானியா படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை136 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடுகள் இடையே லேக் விக்டோரியா எனும் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. தான்சானியா நாட்டில் உள்ள உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொரு தீவுக்கு இந்த ஏரி வழியாக படகு மூலம் 400-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றி சென்றதால் எதிர்பாராவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது. இதனால், படகு நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்ய அந்நாட்டு அதிபர் ஜான் மகுபுலி உத்தரவிட்டுள்ளார். நான்கு நாட்கள் தேசிய துக்கதினமாக அனுசரிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்