லாவோஸ் நாட்டில் தடுப்பணை உடைந்தது - தத்தளிக்கும் கிராமங்கள்

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸ் நாட்டிலுள்ள தடுப்பணை உடைந்ததில், நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர்.
லாவோஸ் நாட்டில் தடுப்பணை உடைந்தது - தத்தளிக்கும் கிராமங்கள்
x
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸின் அட்டாபேயு மாகாணத்தில், நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின் கீழ், கடந்த 2013-ம் ஆண்டு புதிய அணை கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதன் கட்டுமானப்பணி 90 சதவீதம் முடிவடைந்த நிலையில், அடுத்தாண்டு அணை திறக்க ஏற்பாடு நடந்து வந்தது. இந்நிலையில், அணையின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இதனால், தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர், வெள்ளமாக உருவெடுத்து 6 கிராமங்களை மூழ்கடித்தது. இந்த விபத்தில், பலர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மீட்பு பணிகள், போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்