"வாக்குகளை பெற என்னை சிலுவையில் ஏற்றுகிறார்கள்" - விஜய் மல்லையா

லண்டனில் உள்ள சொத்துக்கள் என் பெயரில் இல்லை
வாக்குகளை பெற என்னை சிலுவையில் ஏற்றுகிறார்கள் - விஜய் மல்லையா
x
லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய லண்டன் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தனது சொத்துக்களை தர தயார் என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். ஆனால் லண்டனில் இருக்க கூடிய சொத்துக்கள் தன்னுடையது அல்ல என்றும், அவை தன் தாயார் மற்றும் குழந்தைகளின் சொத்து என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். தன்னுடைய பெயரில் சில கார்களும், நகைகள் மட்டுமே இருப்பதாகவும், நேரம் அறிவித்துவிட்டு, வீட்டுக்கு வந்தால்,  அதை தர தான் தயாராக இருப்பதாகவும் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இந்தியாவை பொறுத்தவரை தாம் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியர் என்று தெரிவித்துள்ள விஜய் மல்லையா, இந்தியாவில் எதிர்வரும் தேர்தலில் ஓட்டு வாங்க தன்னை சிலுவையில் ஏற்ற பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்