திருமணமானவர்களுக்கான சர்வதேச அழகி போட்டி: கோவையை சேர்ந்த 49 வயது பெண்ணுக்கு 3ம் இடம்

சர்வதேச அழகிப் போட்டியில் கோவையை சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற 49 வயது பெண் பட்டம் வென்றுள்ளார்
திருமணமானவர்களுக்கான சர்வதேச அழகி போட்டி: கோவையை சேர்ந்த 49 வயது பெண்ணுக்கு 3ம் இடம்
x
கலிபோர்னியாவில் நடந்த சர்வதேச அளவிலான அழகிப் போட்டியில் கோவையை சேர்ந்த 49 வயதான ஜெயஸ்ரீ என்ற பெண், 3ஆம் இடத்தை பெற்றுள்ளார். திருமணமான பெண்களுக்காக நடத்தப்பட்ட இந்த போட்டியில் உலக அளவில் 85 பேர் பங்கேற்றனர். முதல் இரண்டு இடங்களை அமெரிக்கா மற்றும் ஜப்பான் பெண்கள் பிடித்த நிலையில், 3 வது இடத்தை கோவையை சேர்ந்த ஜெயஸ்ரீ பெற்றுள்ளார். பெண்களுக்கு ஆரோக்யத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கவே இந்த போட்டியில் கலந்து கொண்டதாக ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார். இவருக்கு 23 வயதில் மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்