ஈரானில் ஹிஜாப் அணியாமல் உணவு சாப்பிட்ட பெண்கள்.. கொடூரமான சிறையில் அடைக்கப்பட்டதால் அதிர்ச்சி

x

ஈரானில் பொது வெளியில் ஹிஜாப் அணியாமல் உணவு விடுதியில் சாப்பிட்ட பெண்ணை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். தொன்யா ராட் என்ற பெண், மற்றொரு பெண் என இரண்டு பேர் உணவு விடுதி ஒன்றில் ஹிஜாப் அணியாமல் காலை சிற்றுண்டி சாப்பிட்டனர். இது குறித்த புகைப்படம் வெளியான நிலையில், தொன்யா என்ற அந்த பெண்ணை, போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் அவரை எவின் சிறையில் அறை எண் 209-ல் அடைத்து உள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இந்த எவின் சிறையானது அரசியில் கைதிகள் அடைக்கப்படும், கொடூர மற்றும் குறைவான வசதிகளை கொண்டது என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்