"பாமக MLA குடும்பத்தோடு.." - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

மேட்டூர் தொகுதி எம்எல்ஏவான சதாசிவம், அவரது மகன் சங்கர் மற்றும் குடும்பத்தினர் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல்நிலையத்தில் மருமகள் மனோலியா புகார் அளித்திருந்தார். இதையடுத்து, வரதட்சனை கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி சதாசிவம் குடும்பத்தினர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், தவறான குற்றச்சாட்டுகளுடன் புகாரளித்துள்ளதாக சதாசிவம் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். ஆனால், விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வரும் 4ம் தேதி சூரமங்கலம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சதாசிவம் குடும்பத்தினருக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், விசாரணையை 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்த‌து.


Next Story

மேலும் செய்திகள்