`ஓட்டுக்கு சரக்கா?' - `இது புதுசா இருக்குண்ணே..!'

x

`ஓட்டுக்கு சரக்கா?' - `இது புதுசா இருக்குண்ணே..!'

#kanyakumari #liquor #elections2024 #thanthitv

கன்னியாகுமரி அருகே வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பெட்டி, பெட்டியாக பதுக்கி வைத்திருந்த அரசு டாஸ்மாக் மதுபாட்டில்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டநிலையில், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் அடுத்த முள்ளூர்துறை மீனவ கிராமத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற போலீசார் பெட்டி பெட்டியாக பதுக்கி வைத்திருந்த ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்