விடுதி அறைக்குள்ளே வார்டன் எடுத்த விபரீத முடிவு - திருப்பூரில் அதிர்ச்சி

x

தாராபுரத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கல்லூரியின் மாணவர்கள் விடுதி, பொள்ளாச்சி சாலையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தினுள் அமைந்துள்ளது. அங்கு கோவை, வால்பாறையை சேர்ந்த வினித்குமார் என்பவர் விடுதி காப்பாளராக பணியாற்றி வந்தார். 25 வயதான இவர், திடீரென விடுதி அறையினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞரின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்