"2 நாளைக்கு ரூ.240 கோடி செலவு...வெள்ள பாதிப்புக்கு மட்டும் பணம் இல்லையா?" - வி.கே.சசிகலா கேள்வி

x

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தர நிதி இல்லை கூறும் அரசுக்கு 2 நாள் கார் பந்தயம் நடத்துவதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது என வி.கே.சசிகலா கேள்வி எழுப்பி உள்ளார். எம்ஜிஆரின் நினைவு நாளை ஒட்டி, மெரீனாவில் உள்ள அவருடைய நினைவிடத்தில் தூவி மரியாதை செலுத்திய பின், செய்தியாளர்களுக்கு பேட்டித்தார். அப்போது, எண்ணூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், தென் மாவட்ட மக்களுக்கும் அரசு அறிவித்துள்ள நிவாரண நிதி போதுமானதாக இல்லை என்று கூறினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு போதிய நிதி இல்லை என்று சொல்லும் அரசு, கார் பந்தயத்துக்கு மட்டும் 240 கோடி ரூபாய் எவ்வாறு முடிந்தது என்று கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்