கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்
கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்
ஓசூர் அருகே ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரிகளை கொட்டும் மழையில் கிராம மக்கள் சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரட்டகிரி கிராமத்தில் ஏராளமான கல் குவாரி உள்ளது.
இந்த கல் குவாரிகளில் இருந்து ஜல்லிக்கற்கள், எம் சாண்டு மணல் ஆகியவை தினந்தோறும் டிப்பர் லாரிகளில் ஏற்றப்பட்டு கிராமத்தின் வழியாக கொண்டு சொல்லப்படுகிறது.
டிப்பர் லாரிகளால் கிராமத்திலுள்ள சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதாகவும், வீடுகளில் தூசு பரவி சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாகவும் கிராம மக்கள் லாரிகளை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story