"3 ஆண்டுகளுக்கு தடை.." ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரிக்கை

x

தமிழகத்தில், காலியாக உள்ள 2 ஆயிரத்து 582 பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு நாளை நடைபெறுகிறது. 41 ஆயிரத்து 485 பேர் பங்கேற்கும் இத்தேர்வு, 130 மையங்களில் நடைபெறுகிறது. தேர்வுகள் காலை 10.30 மணிக்கு , துவங்கி 1.30 மணிக்கு தேர்வு முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் போது, குற்றவியல் செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் மீது 3 ஆண்டுகளுக்கு தடை, காவல்துறை நடவடிக்கை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியும் எச்சரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்