"உரிமையியல் பிரச்னையில் போலீசார் தலையிடக் கூடாது" உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

x

மதுரை எஸ்.எஸ். காலனியைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், வாடகை பாக்கி தொடர்பாக தனக்கும், வீட்டு உரிமையாளருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில், இது குறித்து எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், புகாரின் கீழ் நடவடிக்கை எடுக்காமல் காவல் ஆய்வாளர் கட்டப்பஞ்சாயத்து செய்தததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், உரிமையில் பிரச்னையில் போலீசார் தலையிடக்கூடாது என உத்தரவிட்ட போதிலும், காவல் ஆய்வாளர் தலையிடுவது துரதிர்ஷ்டவசமானது என, தெரிவித்தது. மேலும், எஸ்.எஸ். காலனி காவல் ஆய்வாளர் மீது மதுரை மாநகர காவல் துறை துணை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீதிமன்றம் பரிந்துரைத்தது.


Next Story

மேலும் செய்திகள்