பேரவையில் கிடைத்த அங்கீகாரம் - அரசு பேருந்தில் புன்னகையுடன் சென்ற ஆர்.பி.உதயக்குமார்

x

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், நேற்று சட்டப்பேரவை நிகழ்ச்சி முடிந்து இல்லம் திரும்பியபோது, சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லும் அரசு பேருந்தில் பயணித்தார். அதிமுகவில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பிறகு, எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தியதன்பேரில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை அவருக்கு ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பேரவை நிகழ்ச்சி முடிந்து இல்லம் திரும்பிய ஆர்.பி.உதயகுமார் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லும் அரசு பேருந்தில் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்