இருளில் தவிக்கும் பழங்குடியின மக்கள்.. கரண்ட் இல்லாமல் படிக்கும் மாணவர்கள் - கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த சிறுமி

x

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே எஸ்.மோட்டூர் கிராமத்தில் பழங்குடியின மக்கள் மின்சார வசதி இல்லாமல் அவல நிலையில் வசித்து வருகின்றனர். மின்சார வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் இருளில் விளக்கு ஏற்றி படித்து வருகின்றனர். மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கோரி பல முறை தாங்கள் கோரிக்கை வைத்ததாகவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பழங்குடியின மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் கண்ணீர் மல்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்