"மென்டல் டார்ச்சரா இருக்கு" - 600 பவுன் புகார்.. அதிமுக மாஜி MLA மகன் அதிர்ச்சி பேட்டி

x

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ள அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கந்தனின் மகன் சதீஷ்குமார், இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். மாமன்ற உறுப்பினராக உள்ள சதீஷ்குமார் மீது அவரது மனைவி நேற்று வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகாரளித்தார். அதனை மறுத்த சதீஷ்குமார், டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விவாகரத்து வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வரவுள்ளதால், தனது மனைவி பொய் புகாரளித்துள்ளதாக தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்