கருவறையில் முழுவதும் 7 லட்சம் பணத்தால் அலங்காரம்.. பக்தியுடன் தரிசித்த பக்தர்கள்..

x

ஆங்கில புத்தாண்டையொட்டி நாகையில் சத்குரு சம்ஹார கோவிலில் பணமாலை அலங்காரம் செய்யப்பட்டது... அன்னதானத்திற்கு புகழ் பெற்ற இக்கோவிலில் சத்குரு சம்ஹார சாமி பீடம் முழுவதும் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது... மக்களின் கடன் தீர்ந்து செல்வம் கொழிக்க 500, 200, 100, 20, என 7 லட்சம் ரூபாய் மதிப்பில் ரூபாய் நோட்டுகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது... தொடர்ந்து சாமிக்கு அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்...


Next Story

மேலும் செய்திகள்