குளம் உடைந்து ஊருக்குள் புகுந்த தண்ணீர்.. களத்தில் இறங்கிய கிராம மக்கள்

x

உடன்குடியில் உள்ள சடையனேரி குளத்தில், 4 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் உடைப்பு ஏற்பட்டது. இதனால், 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களான மெஞ்ஞானபுரம், லட்சுமிபுரம், செட்டியாபத்து, தண்டுபத்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும், உடைப்பை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் கிராம மக்களே களத்தில் இறங்கி, கற்கள் மற்றும் மணல் மூட்டைகளை கொண்டு உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்