சொன்னதை செய்த சென்னை போலீஸ்.. குடும்பத்தோடு நன்றி கூறிய பெண்

x

சென்னை ஆவடி அருகே ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை மீட்டுக் கொடுத்த காவல்துறைக்கு, பெண் ஒருவர் குடும்பத்தோடு நன்றி தெரிவித்துள்ளார். பட்டாபிராம் தண்டுரை பகுதியை சேர்ந்த தேவி என்பவர், 12 சென்ட் நிலம் மற்றும் கடையை சிலர் அபகரிக்க முயற்சிப்பதாக புகார் தெரிவித்திருந்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத‌தால், ஆவடி துணை ஆணையர் அலுவலகம் முன்பு கடந்த வாரம் தீக்குளிக்க முயன்றார். அதன்பின்னர் அவரது புகார் மீது நடவடிக்கை எடுத்துள்ளர். இதையடுத்து, தனது சொத்தை மீட்டுக் கொடுத்த காவல்துறைக்கு தனது குடும்பத்தாருடன் சேர்ந்து நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்