பேச மறுத்த 'Facebook' காதலி..காதலன் கொடுக்க நினைத்த கிப்ட்..கடைசியில் தனக்கு தானே செய்த சம்பவம்

x

அவிநாசியை சேர்ந்த சத்யஸ்ரீ என்ற இளம்பெண், திருப்பூர் 60 அடி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். சத்தியஸ்ரீ மருத்துவமனையில் பணியில் இருந்தபோது, அவரை தேடி நரேந்திரன் என்ற இளைஞர் வந்துள்ளார். பின்னர் இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நரேந்திரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், சத்யஸ்ரீயின் கழுத்தை அறுத்துவிட்டு, தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயம் அடைந்த சத்திய ஸ்ரீ, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த நரேந்திரன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பேஸ்புக் மூலமாக கடலூரை சேர்ந்த நரேந்திரனிடம் சத்திய ஸ்ரீக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்ததும், கடந்த சில நாட்களாக இளம்பெண் பேச மறுத்ததால், ஆத்திரமடைந்த காதலன் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்