அசுர வேகத்தில் மோதிய படகு..உடைந்து போன உரிமையாளரின் கால்..ராமேஸ்வரத்தில் பரபரப்பு

x

ராமேஸ்வரம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாட்டுப்படகு மீது விசைப்படகு மோதிய விபத்தில் நாட்டுப் படகு உரிமையாளரின் 2 கால்களும் உடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... கரையூரைச் சேர்ந்த துரை சிங்கம், தன்னுடைய நாட்டுப்படகில் மகன் மற்றும் மற்றொருவருடன் சேர்ந்து நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்... அப்போது அந்த நாட்டுப்படகு மீது விசைப்படகு ஒன்று பயங்கரமாக மோதிய நிலையில், நாட்டுப்படகு முழுவதும் சேதம் அடைந்தது... மற்ற இருவர் கடலில் குதித்து தப்பிய நிலையில் துரை சிங்கம் இடிபாடுகளுக்குள் சிக்கி காலில் படுகாயம் அடைந்தார்... சக மீனவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் துரை சிங்கத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..


Next Story

மேலும் செய்திகள்