6 நாட்களாக வடியாத மழை நீர்.. படகில் சென்ற உதவிய முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

x

சென்னை வளசரவாக்கம் பகுதியில், அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், படகில் சென்று வீடு வீடாக சென்று நலத்திட்ட உதவி வழங்கினார்.

எஸ்.வி.எஸ்.நகர், சுப்பிரமணியன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவு தேங்கி இருந்த மழை நீரில், அவர் வீடு வீடாக நடந்து சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் படகில் நின்றபடி சென்று, அந்த பகுதி மக்களுக்கு பிஸ்கட் போர்வை அரிசி, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

6 நாட்களுக்கு மேலாக மின்சாரம் வரவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி மின்சாரம் தர

நடவடிக்கை எடுக்கிறேன் என வாக்குறுதி அளித்தார்


Next Story

மேலும் செய்திகள்