விதிகளை மீறி கோயிலுக்குள் பக்தர்கள் செய்த காரியம்

x

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலுக்குள் பக்தர்கள் விதிகளை மீறி சர்வ சாதாரணமாக செல்போன் பயன்படுத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயிலுக்குள் நுழையும் முன்பு முறையான பரிசோதனை மேற்கொள்ளாததால் பக்தர்கள் சர்வ சாதாரணமாக செல்போன்களை எடுத்துச் சென்று செல்ஃபி, புகைப்படங்களை எடுத்து வருகின்றனர். ராமநாதசாமி கோயிலுக்கு ஏற்கனவே சமூக விரோதிகளின் அச்சுறுத்தல் இருந்து வருவதை அடுத்து கோயிலுக்குள் செல்போன், பேக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், பக்தர்கள் விதிகளை மீறி பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்