ஒரே நாளில் திடீரென மாறிய வானிலை... ஒன்னும் சொல்ல முடியாமல் திகைத்த மக்கள்

x

வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்துள்ளது.

தஞ்சை பாபநாசம், அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, கபிஸ்தலம், சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது... இந்த மழை தொடர்ந்தால் கோடை சாகுபடி பணிக்கு பலன் தரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்...

மதுரையில் மழை பொழிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது... திருப்பரங்குன்றம், திருநகர், பசுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பொழிந்தது... மதுரையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்தின் போது மழை பொழிவது வழக்கம்.

நீலகிரி மாவட்டம் குன்னூர், அருவங்காடு, வெலிங்டன், உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மார்க்கெட் பகுதிகளில் நகராட்சி கழிவு நீர் குழாய் உடைந்து அங்குள்ள 18 கடைகள், குமரன் நகரில் 2 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது... சீரமைக்கும் பணிகளில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

தென்காசி கடையநல்லூர் பகுதிகளில் திடீரென மழை பொழியத் துவங்கிய நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட்டம் கூட்ட முடியாதோ என திமுக நிர்வாகிகள் கலக்கம் அடைந்தனர்...


Next Story

மேலும் செய்திகள்