பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலம் -கோவில்களில் மனமுருக பக்தர்கள் வழிபாடு -பக்தி பரவசத்தில் தமிழகம்

x

பங்குனி உத்திரத் திருவிழாவை ஒட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்...

நெல்லை மாவட்டம் சடைய புரத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர பாத தரிசன திருவிழாவை ஒட்டி பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பங்குனி உத்திர நட்சத்திரத்தில் அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து ஆனந்த தாண்டவம் ஆடி இருவரும் எழுந்தருள பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு வழிபாடு நடத்தினர்...


Next Story

மேலும் செய்திகள்