SETC-ல் புக் செய்வோருக்கு நல்ல செய்தி... வெளியான அறிவிப்பு

x

தமிழக அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் காலம் 30 நாட்களிலிருந்து 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகளின் வசதிக்காக 15/03/2024 முதல் பயண முன்பதிவு காலம் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக உயர்த்தப்படுகிறது. எனவே தொலைதூரம் பயணம் மேற்கொள்பவர்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, மொபைல் ஆப் மூலம் போக்குவரத்து கழக இணையதளத்தில் முன்பதிவு செய்து பயணிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்