குற்றவாளிகள் மனம் திருந்தி வாழ சிறப்பு நிகழ்ச்சி - புதிய பாதை நிகழ்ச்சி மூலம் போலீசார் அறிவுரை

x

சாத்தான்குளத்தில், குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றவாளிகளுக்கு புதிய பாதை நிகழ்ச்சி மூலம் திருந்தி வாழ போலீசார் அறிவுரை வழங்கினர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையை குற்றவாளிகளுக்கு புதிய வாழ்வை ஏற்படுத்தும் முயற்சியாக, எஸ்பி உத்தரவின் பேரில் புதிய பாதை நிகழ்ச்சிக்கு போலீசார் ஏற்பாடு செய்தனர். இதன்படி, குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை ஒருங்கிணைத்த போலீசார், பொது மருத்துவர், மனநல மருத்துவர் மற்றும் வழக்கறிஞர்கள் மூலம் அவர்களுக்கு அறிவுரை வழங்கினர். அப்போது பேசிய போலீசார், உங்களை நீங்கள் மாற்றிக்கொண்டால் சமுதாயம் மாறும் என அறிவுரை வழங்கினர். அதேபோல், கொலை வழக்கில் சிறை சென்ற நபர், போலீசாரால் தான் மனம் திருந்தி வாழ்வதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்