சுவாமிக்கு வெள்ளி வேல் காணிக்கை - "என் வேண்டுதலை அவர் நிறைவேற்றுவார்" - அமைச்சர் ரோஜா பரபர பேச்சு

x

எந்த ஒரு தனி மனிதரைப் பற்றி தவறாக விமர்சனம் செய்தால் மிக மோசமான பதிலடி தான் கிடைக்கும் என்று, நடிகையும், ஆந்திர மாநில அமைச்சரும் ரோஜா தெரிவித்துள்ளார். திருத்தணி முருகன் கோவிலில் தரிசனம் செய்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆந்திர மாநில முதல்வராக வரவேண்டும் என்பதற்காக வெள்ளி வேல் காணிக்கையாக வழங்கி வேண்டிக்கொண்டதாக கூறினார். ஒரு பெண் என்றும் பார்க்காமல் தன்னை பற்றி சந்திரபாபு நாயுடு விமர்சனம் செய்ததாகவும்,தனி மனிதரைப் பற்றி தவறாக விமர்சனம் செய்தால் மிக மோசமான பதிலடி தான் கிடைக்கும் என்றும் ரோஜா கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்