பிஞ்சு கையில் கண்டு கண்டாக வீக்கம்...பிரம்பெடுத்து ருத்ரதாண்டவம் ஆடிய ஆசிரியர்..

x

மேலூர் சுக்காம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு அரசு துவக்கப்பள்ளியில் ஜெயராஜன் என்பவர் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், ஆசிரியர் ஜெயராஜன் மாணவ, மாணவிகளை பிரம்பால் அடித்தும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். தகவலின் பேரில் அங்கு வந்த கொட்டாம்பட்டி வட்டார கல்வி அலுவலர் ஆரோக்கியராஜ், ஜெயராஜனை பள்ளியில் இருந்து விடுவித்து மாற்று ஆசிரியர் மூலம் பள்ளியை தொடர்ந்து நடைபெற ஏற்பாடு செய்தார். இதனிடைய ஜெயராஜனை கொட்டாம்பட்டி காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்