பணம் பெருகும் என நடந்த நூதன மோசடி பின்னணியில் பறிபோன லட்சங்கள்

x

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பூவந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் தென்காசி மாவட்டம் அச்சன்புதூரை சேர்ந்த ஒருவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தான் பணிபுரியும் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் ஒரு மாதத்தில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி, ஜீபே மூலம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பிய நிலையில், அதன்பின் செல்வகுமாரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அவ,ர் தென்காசி மாவட்ட சைபர் கிரைமில் புகாரளித்த நிலையில், செல்போன் சிக்னல் வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் வைத்து செல்வக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்