சிறுவனின் உயிரை பறித்த 'விஷ தண்ணீர்' - தூத்துக்குடி அருகே அதிர்ச்சி சம்பவம்

x

சாத்தான்குளம் அருகே வடக்கு ராமசாமி புரம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் விக்னேஷ், 8ம் வகுப்பு படித்து வந்தார். இவரது வீட்டில் எலி தொல்லை இருந்து வந்ததால், எலி மருந்து பயன்படுத்தி வந்துள்ளனர். கடந்த 18ம்தேதி, வீட்டின் அலமாரியில் வைத்திருந்த எலி மருந்து கீழே விழுந்ததில், அருகில் வைத்திருந்த சொம்பு தண்ணீரில் விழுந்துள்ளது. இதனை கவனிக்காத சிறுவன், எலி மருந்து கலந்திருந்த தண்ணீரை எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதில் மயக்கமடைந்த சிறுவனை பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். ஆனால் அங்கு சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்