மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - தலைமறைவான தலைமை ஆசிரியர்! தட்டி தூக்கிய போலீஸ்

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். செம்மண்கூடல் ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியராக இருந்த ராதாகிருஷ்ணன் என்பவர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கிராம மக்கள், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விசாரணை போலீசார் நடத்திய நிலையில், தலைவாசல் பகுதியில் உறவினர் வீட்டில் பாதுங்கி இருந்த தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்