அரசு கல்லூரியின் கழிவறையை சுத்தம் செய்து வீடியோ - அதிமுக நிர்வாகிகள் 22 பேர் மீது வழக்குபதிவு

x

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில், அனுமதியில்லாமல் அரசு கல்லூரியின் கழிவறையை சுத்தம் செய்து அதை வீடியோவாக சமூகவலை தளத்தில் பதிவிட்ட அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய அனுமதி பெறாமல் இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி முதல்வர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி, அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராதிகா உட்பட 20 பெண்கள் மற்றும் இரு ஆண்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கல்லூரியின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்