சட்டென்று மாறிய வானிலை... பலத்த சூறைக்காற்று திடீர் மழை

x

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், சில பகுதிகளில் திடீரென மழை பெய்து வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவு பகுதியில் பல்வேறு இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

இதேபோல், தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மேலும், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மிதமான மழை பொழிவு இருந்தது.


Next Story

மேலும் செய்திகள்