வழி தவறி சென்ற சிவனடியார்களை போலீசாரிடம் பிடித்து கொடுத்த பொதுமக்களால் பரபரப்பு

x

மகா சிவராத்திரியையொட்டி இராமேஸ்வரம் சென்ற காசியை சேர்ந்த 5 சிவனடியார்கள், வழிபாடு முடிந்து சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வழியாக சென்றவர்கள், அங்குள்ள முருகன் கோயிலை தரிசித்து விட்டு திரும்பியுள்ளனர். இந்நிலையில், கூகுள் மேப் உதவியுடன் வழி தவறி மணமேட்டுப்பட்டி கிராமம் வழியாக சென்ற சிவனடியார்களை, சந்தேகத்தின் பேரில் பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், வழி தவறி சிவனடியார்கள் வந்தது தெரிய வரவே 5 பேரையும் போலீசார் விடுவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்