"கடன் வாங்கி கட்டிய வீடு இடிந்து போச்சு"...அரசு நிவாரண உதவி வழங்க கோரிக்கை

x

புதுச்சேரி, உப்பளம் தொகுதியில் உள்ள உப்பனாறு வாய்க்கால் கரைப்பகுதியில் தடுப்புச் சுவர் அமைத்தபோது, பொக்லைன் இயந்திரத்தில் தூர் வாரியதால், கால்வாய் ஓரம் புதிதாக கட்டப்பட்டிருந்த 3 அடுக்குமாடி வீடு முழுவதுமாக இடிந்து விழுந்தது. இந்நிலையில், வீட்டை இழந்தவர்கள் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது, அரசு விரைந்து நிவாரண நிதி வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்