மேல தாளத்தோட பொதுமக்கள்..பள்ளிக்கு கொண்டுவந்த சீர்வரிசைகள்.. ஆரவாரமான வரவேற்பு

x

பொதுமக்கள் தங்களது சொந்த செலவில் கல்வி உபகரணங்களை அரசு பள்ளிக்கு சீர்வரிசையாக கொண்டு சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்திற்க்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது சொந்த செலவில் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உபகரணங்களை சீர்வரிசையாக கொண்டு சென்றனர். சாரட்டு வண்டியின் மூலம் மேள தாளங்கள் முழங்க, சுமார் மூன்று கிலோமீட்டர் வரை ஊர்வலமாக வந்து பள்ளிக்கு வழங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்