தனியார் மருத்துவமனையின் பகீர் செயல்.. கொந்தளித்த மக்கள்.. ஓசூரில் பரபரப்பு

x

ஓசூர் ராயக்கோட்டை அட்கோ பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் இருந்து, குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையறிந்த அப்பகுதி மக்கள், தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு, அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையின் கழிவுநீரால், பொதுமக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். தகவல் அறிந்து வந்த ஓசூர் போலீசார், இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனியார் மருத்துவமனையில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் கழிவு நீர் திறந்து விடப்படுவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்