கைதிகளின் பற்கள் பிடுங்கிய விவகாரம்... பாதிக்கப்பட்டவருக்கு சிபிசிஐடி சம்மன்

x

நெல்லை அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சூர்யாவுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது.

அம்பாசமுத்திரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல்நிலையத்தில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்ட சூர்யா என்பவருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நாளைய (ஆக.2) தினம் நெல்லை சிபிசிஐடி அலுவலகத்தில் 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூர்யாவுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்