கடும் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த நெல்லை - பறந்த உத்தரவு

x

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அம்பாசமுத்திரம் தாலுகா அகஸ்தியர்பட்டியில் உள்ள தனியார் மைதானத்தில் நாளை தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி வரவுள்ளதால் வாகன தணிக்கை, தங்கும் விடுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடமான பேருந்து - ரயில் நிலையங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்... அதேபோல் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரசார கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களில் அம்பாசமுத்திரம் தாலுகா அகஸ்தியர்பட்டி பகுதியை சுற்றியுள்ள சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுவதாகவும், இதனால் அங்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்